(இனியபாரதி)
பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அரசதலைவர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
பொது வேட்பாளர் தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் சிவில் சமூக பிரதிநிதிகள் பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்து கதைத்த போது பொது வேட்பாளர் தொடர்பான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறினேன். அவர்களும் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான தமது கருத்துக்களையும் கூறினார்கள்.
அதன் போது பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வை நடாத்தி அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்துவோம் என்றேன். அதற்கு அவர்களுக்கும் சம்மதித்தர்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும் அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது இவர் அவரின் ஆள் இவரின் ஆள் என தாக்கி பேசாது தமது கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும். அதற்காகவே அந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளேன் என்றார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.