(புதியவன்)
பாதாள உலக குழுத் தலைவரான களு துசாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் துப்பாக்கியுடன் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாத்தறை-பிக்வெல்ல பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது சந்தேகநபர்களிடம் இருந்து உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் உயிர்கொல்லி போதை மாத்திரைகள் அடங்கிய பொதியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலக குழுத் தலைவரான மஹரகம கலு துசார கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது 24 வயது மகனும் அவரது மூன்று நண்பர்களும் விருந்தொன்றை ஏற்பாடு செய்வதற்காகவும் துப்பாக்கியைச் சரிசெய்வது தொடர்பாகவும் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.