(புதியவன்)
எதிர்வரும் செப்ரெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறை ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி நுழைவு நிறுத்தப்படுமென்றும், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
கல்விப்பணிமனையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமெனவும் இது தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், பரீட்சை பணிமனியின் அவசர இலக்கமான 1911 இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.