(யோகி)
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பில் வாழ்வாதாரத்துக்காக பயிரிடப்பட்ட தென்னை, பலா, மரவள்ளி, வாழை போன்ற பலன்தரும் பயிர்களை யானைகள் அழித்து சேதப்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாலை வேளைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் 5 மணிக்கு பின்னர் வெளியிடங்களுக்குச்சென்று வீடுதிரும்ப முடியாத நிலையும், யானைகள் மக்களை துரத்துவதால் தமது உயிருக்கு அச்சறுத்தலான நிலை இருப்பதாகவும், யானையின் அட்டகாசத்திலிருந்து தம்மையும் பயிர்களையுயம் பாதுகாக்க இரவு வேளைகளில் நித்திரையின்றி யானைகளுக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
நாளாந்த ஜீவனோபாயத்துக்காக கூலித்தொழில் செய்பவர்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலுக்கு செல்வதா யானைகளுக்கு காவல் பார்ப்பதா என தெரியாத நிலையில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் இதற்கு உரிய தீர்வினை இதுவரையில் எந்த அதிகாரையும் பெற்றுத் தரவில்லை, இனியாவது பெற்றுத் தருவார்களா?(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.