வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் குற்றச்சாட்டு!
நாடு முழுவதிலும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் கடந்த 2ஆம் திகதி மதியம் ஆரம்பிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் நீண்ட நெடுங்காலப் பிரச்சினைகள் தொடர்பானது வேலைநிறுத்த போராட்டம் 25 நாட்களாக இடம்பெற்றுவருகின்றது.
இப்பிரச்சனை தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே பல கட்ட கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் நடாத்தியும் கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அளவுக்கதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டும், இதுவரை எவ்வித தீர்வினையும் வழங்காமல் கோரிக்கைகள் யாவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகப்படுவதையிட்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் கோவமடைந்த்துள்ளதாக வடக்கு மாகாணம் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும், வேலை நிறுத்தம் காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளதையிட்டு அரசு அக்கறையற்றிருப்பதும் அரச பல்கலைக்கழகங்களை புறக்கணித்து தனியார் பல்கலைக்கழகங்களை மட்டும் ஊக்குவிப்பதுக்குத்தானோ என தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.