(புதியவன்)
அரசதலைவர் தேர்தல் தொடர்பாக அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார். அரசதலைவர் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் அரசதலைவருடன் ஒன்றிணைவார்கள் என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பகிரங்க விவாதம் இடம்பெறும் போது அன்றைய தினம் விடுமுறை வழங்க வேண்டும். இவ்விருவரின் விவாதத்தை நாட்டு மக்கள் பொறுமையாக அமர்ந்து பார்க்க வேண்டும்.விவாதத்தைப் பார்த்ததன் பின் நாட்டு மக்கள் எவரும் இருவருக்கும் வாக்களிக்கமாட்டார்கள்.
அரசதலைவர் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் அரசதலைவருடன் ஒன்றிணைவார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். நான் குறிப்பிடுவது நடைபெறாவிடின் என்னைக் கேலி செய்யலாம் என்றார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.