(புதியவன்)
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசரமாக இந்திய பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதிய தலைமை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அரசதலைவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் மூலம் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து அரசதலைவர்த் தேர்தலை இலக்கு வைத்து ஊடக நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.