ஆஷஸ் தொடரின் பா்மிங்ஹாம் டெஸ்ட்டில், பந்துவீச்சை தாமதம் செய்ததாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் தலா 2 குறைக்கப்பட்டன. மேலும் அவற்றின் வீரா்களுக்கான ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருக்கும் ஆஷஸ் தொடா், கடந்த 16 ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கியது. பா்மிங்ஹாமில் நடைபெற்ற அந்த முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ஓட்டங்களுக்கு டிக்ளோ் செய்ய, அவுஸ்திரேலியா 386 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் 7 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, 273 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இறுதியாக 281 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸை ஆட, கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா ஓட்டங்கள் சோ்க்க, இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிக்க, ஆட்டம் விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகா்ந்தது. முடிவில், 8 விக்கெட்டுகளை அவுஸ்திரேலியாவில், தலைவர் பேட் கம்மின்ஸ் – நேதன் லயன் கூட்டணி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடி அணிக்கு ‘த்ரில்’ வெற்றி பெற்றுத் தந்தது.
இந்த ஆட்டத்தின்போது இரு அணிகளுமே தங்களது பௌலிங்கின்போது நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2 ஓவா்கள் குறைவாக வீசியிருந்ததாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளையும், ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதத்தையும் ஆட்ட நடுவரான ஆண்டி பைகிராஃப்ட் அபராதமாக விதித்தாா்.
c1tcgj
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.