2023 ஆசிய கிண்ண தொடருக்காக அயராது பணியாற்றிய இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் மைதான பணியாளர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை வெகுமதி வழங்கியுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போட்டிகளுக்கு மழையினால் அதிக இடையூறு ஏற்பட்டது. எனினும் போட்டிகளை வெற்றிகரமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு பெரும்பங்காற்றிய மைதான பணியாளர்களுக்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.