இலங்கைக் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 28ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
சிட்னி நகரின் டவுனிங் செண்டர் மாவட்ட நீதிமன்றத்தில் குணதிலக்க மீதான வழக்கு விசாரணையின் விசேட அமர்வு செப்டெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமானது.
இதில் குணதிலக்க மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும் முன்னிலைச் சாட்சியம் அளித்தனர்.
குணதிலக்கவுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்கு குற்றச்சாட்டிக்கள் பதிவு செய்யப்பட்ட போதும் அதில் மூன்று குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டு மாத்திரம் அவர் மீது நீடிக்கின்றது. இதில் பாலியல் தாக்கத்துக்கு இலக்கானதாக கூறப்படும் பெண், ஆணுறை அணியாமல் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தாம் ஏமாற்றப்பட்டதாகவும் அந்த தருணத்தில் தனது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ரி-20 உலகக்கிண்ணத்துக்காக இலங்கை அணியுடன் சென்ற போது குணதிலக்க மீது இந்த குற்றச்சட்டு சுமத்தப்பட்டது. நீதிபதி சாரா ஹூக்கட் முன்னிலையில் இடம்பெற்று வந்த வழக்கில் சாட்சி விசாரணை நேற்று நிறைவடைந்தது.
இதன்படி, வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படுமென நீதிபதி சாரா ஹூக்கட் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.