2023 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
இத்தொடரானது அடுத்தவாரம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்ல விசா வழங்கலில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு பாகிஸ்தான் கிரிக்கட் சபை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
அக்கடிதத்தில் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் நாடுகளில் பாகிஸ்தானுக்கு மட்டும் இன்னும் விசா வழங்கப்படவில்லை எனவும் இந்த பாரபட்சமான முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்திருந்தது.
இதன் விளைவாக தமது அணி உலக கிண்ணத் தொடருக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.