யாழ். நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் நேற்றைய தினம்(2023/03/08) உயிரிழந்துள்ளார்.
யாழ். நிலாவரை - சிறுப்பிட்டி மேற்கு பகுதியை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் (வயது 63) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.