முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ள நோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் விசேட அதிரடைப்படையினரால் நேற்று இரவு அவை து செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ள நோட்டு அச்சிடப்படுவதாக விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42வயதுடைய குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவருகின்றது.
மேலும் குறித்த நபரிடமிருந்து கள்ள நோட்டு அச்சிடும் இயந்திரமொன்றும் அச்சிடப்பட்ட 5000ரூபா தாள்கள் 700ம் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரையும் சான்றுப்பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளன்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2o9pmh
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.