புதியவன்
உலகளவில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில் சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, அந்நாட்டு சுகாதார அமைச்சு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 2ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதிக்குள் 32 ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது இவ்வாண்டு பதிவான அதிகூடிய பாதிப்பாகும். இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் ஒருவார காலப்பகுதிக்குள் 28 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படுவதோடு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி முகமூடிகளை அணிய வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர் கொரோனா அதிகரிப்பின் காரணமாக மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி செலுத்தவும், வௌியே செல்லும்போது கட்டாயம் முகமூடி அணிவது, சமூக இடைவௌியை கடைப்பிடிப்பது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வௌியே செல்வதை தவிர்ப்பது, அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கவனமுடன் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். (ஒ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.