நயினாதீவு நாகபூசணி அம்மன் வீற்றிருக்கும் தீவகத்தின் நுழைவாயிலான பண்ணைச் சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை நாளைய தினம் (18) யாழ்ப்பாண நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த அம்மன் சிலை தொடர்பில் அவசர கலந்துரையாடலொன்று இன்று (17) மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நல்லை ஆதீன சுவாமிகள் தலைமையில் இடம்பெறும் இக்கலந்துரையாடலில் அனைத்து இந்து சமய அமைப்புகள், ஆலய அறங்காவலர்கள், சைவ அபிமானிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.