யாழ்ப்பாணம் - குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார் .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.