(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு ஊடாக வற்றாப்பளை செல்லும் வீதியில் இரு இடங்களில் மழைவெள்ளம் வீதியை குறுக்கறுத்து பாய்வதனால் வீதியால் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முத்துஐயன்கட்டு குளத்தின் நீர் பேராறு ஊடாக கள்ளியடி பகுதியில் இருவேறு இடங்களில் பாலத்தின் மோலால் பாய்கின்றது இந்த இடங்களில் உந்துருளியில்(மோட்டார் சைக்கில்) கூட பயணிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கள்ளியடி பாலத்திற்கு அருகில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்று முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.கள்ளியடி வயல்வெளிபகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன கள்ளியடி பாலங்கள் ஊடக மழைவெள்ளம் நந்திக்கடலினை சென்றடைகின்றது முத்துஐயன்கட்டு குளத்திற்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வான்கதவுகள் மேலும் திறக்கப்படலாம் அதனால் இந்த வீதி ஊடாக பயணிப்பவர்கள் அவதான செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.