(யோகி)
இருவேறு குற்றச்சாட்டில் 04 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது தருமபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லாற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த இரண்டு டிப்பர்கள் வந்திருந்தன. இரண்டு டிப்பர்களும் போலியான மணல் அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தமை அம்பலமானது.
அதனையடுத்த இரண்டு டிப்பர்களும் தருமபுரம் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இரண்டு சந்தேச நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசுவடு பகுதியிலிருந்து இரண்டு டிப்பர்கள் மணல் ஏற்றி பயணித்ததை வீதிச்சோதனை செய்த பொழுது அணுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய இரண்டு டிப்பர்களும் குறித்த பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.