வெண்முதுகுதத்தியானது கபிலதத்தியை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஆரம்பத்தில் இனம் காண்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்._ ராஜேஷ்கண்ணா!
வெண்முதுகுதத்தியானது கபிலதத்தியை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஆரம்பத்தில் இனம் காண்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்._ ராஜேஷ்கண்ணா!

(செல்வன்)

வெண்முதுகுதத்தியானது கபிலதத்தியை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஆரம்பத்தில் இனம் காண்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்._ ராஜேஷ்கண்ணா!


வெண்முதுகுதத்தியானது கபிலதத்தியை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஆரம்பத்தில் இனம் காண்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம் வெண்முதுகுதத்தியானது.
பயிர்களுக்கு துங்குறோ வைரஸை செலுத்துவதால் பயிரின் வளர்ச்சியையும் பாதிக்கும்.என விவசாய ஆராச்சி பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஸ்ரீஸ்பரலிங்கம் ராஜேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக பல்வேறு இடங்களில் நெற்பயிர்களுக்கு வெண்முதுகுத் தத்தியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறித்த நோய் தாக்கம் தொடர்பில் விவசாய ஆராச்சி பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஸ்ரீஸ்பரலிங்கம் ராஜேஸ்கண்ணா  (19.12.2023) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் 

இப்பொழுது உங்களுக்குத் தெரியும் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக கபிலதத்தி மற்றும் வெண்முதுகுத்தத்தியின்  தாக்கம் அதிகரித்து வருகிறது. இத்தத்தியின் தாக்கம் மிக வேகமாக பரவி வடமாகாணம் முழுவதும் இப்பொழுது 10,000 கெக்டேயர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளது  அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்ணளவாக  15,00 கெக்டேயர் நிலங்கள் இந்த வெண்முதுகுத் தத்தியால் பாதிப்படைந்துள்ளது.

இந்த வெண்முதுகுத் தத்தியை அடையாளம் காண விவசாயிகள் பின்வரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. முக்கியமாக வெண்முதுகுதத்தியானது கபிலதத்தியை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஆரம்பத்தில் இனம் காண்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

முதலில் வெண்முதுகுத் தத்தியானது வெண்ணிறமானது முதுகு பகுதியில் கருப்பு நிற அடையாளங்களை கொண்டிருக்கும்.  இது நாற்றுப் பருவத்தில் இருந்து பால் பருவ தானியம் வரை தாக்கும் ஆற்றல் உடையது. இதனுடைய தாக்கம் உக்கிரமானதாக இருக்க காரணம் இவற்றினுடைய நிறையுடலிகளும் அணங்குகளும் ஒரே உணவையே உட்கொள்வதால் தாக்கம் அதிகமாக காணப்படும்.

அதுமட்டுமல்லாது  இது மிக விரைவாக இனப்பெருக்கும் ஆற்றல் உடையது அதனால் இதன் தாக்கம் உக்கிரமாக இருக்கும். அத்துடன் தாவர நஞ்சு என்று சொல்லப்படுகின்ற சில பதார்த்தங்களை உமிழ்நீர் ஊடாக செலுத்துவதனால் விரைவாக பயிர்கள் கருகி போவதற்குரிய ஆபத்தையும் ஏற்படுத்தும். அது மாத்திரமல்ல  ஒரு வைரசினை  செலுத்துவதால் பயிரின் வளர்ச்சியையும் இது ஆரம்பத்தில் பாதிக்கும்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் ஆகிய நாம் ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்த வேண்டும். எனினும்  பல விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை  வழங்கியிருந்த போதிலும் விவசாயிகள் தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருந்த காரணங்களினாலும் அவர்களுக்கு  என்னென்ன மருந்துகளை பயன்படுத்துவது இதை எப்படி கட்டுப்படுத்துவது என்ற விழிப்புணர்வு ஏற்படாமையும் இதற்கு முக்கியமான காரணம்.

எனவே இதை  கட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம்  பல்வேறுபட்ட கருத்தரங்குகளை, பல்வேறுபட்ட கட்டுப்பாட்டு முறைகளையும்  அமுல்படுத்தி வருகின்றது.

இப்பொழுது பல்வேறுபட்ட சிபாரிசு செய்யக்கூடிய மருந்துகளை நாங்கள் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் ஊடாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும்  விவசாயிகள் சிபாரிசு செய்யப்படாத பூச்சி நாசினியை பயன்படுத்துவதனால்  இதனை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமப்படுகின்றனர்  .

அது மாத்திரமல்ல விவசாயிகள் குறித்த நேரத்தில் காலை அல்லது மாலைகளில் இரசாயன கலவையை  விசுறுதல்  வேண்டும் நண்பகல் நேரங்களில் விசுறுவதால் வினைத்திறன் குறைந்து விடும் ஏற்கனவே பாதிக்கபட்ட பகுதிகளில் விலை குறைந்த காலாவதியான கிருமி நாசினிகளை பயன்படுத்தி வருவது தெரிய வருகிறது. எமது நாட்டிலே உற்பத்தி செய்யப்படாத  அல்லது எமது நாட்டிலே சிபாரிசு செய்யப்படாத அதாவது அயல்நாட்டிலிருந்து குறைந்த விலையில் சட்ட ரீதியற்ற முறையில் வாங்கி பிரயோகிப்பது தெரியவந்துள்ளது  . அது மாத்திரமில்ல காலாவதியான மருந்துகளை கூட இவர்கள் பயன்படுத்துகிறார்கள். சில கடைகளிலே காலாவதி திகதி  முடிந்த பின்னரும் குறைந்த விலையிலேயே விற்கப்படுகிறது எமக்கு அறியப்படுகிறது.

விவசாயிகள் இந்த இரசாயனங்களை பயன்படுத்தும் போது ஒன்றுடன் ஒன்று கலந்து  பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக பங்கசு நாசினியை பூச்சி நாசினியோடு இல்லாவிட்டால் பூச்சி நாசினியை களை நாசினியோடு பயன்படுத்துவதை முக்கியமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரசாயனங்களை ஒன்றுடன் ஒன்று கலக்கும் போது அதன் தொழில்பாடுகளை இழந்து விடுகின்றன.  

குறித்த  இரசாயனங்களை பயன்படுத்தும் போது மேற்புறத்தில் பார்த்தீர்களானால் குறித்த இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும் அதே  இலக்கமுடைய பூச்சி நாசினிகளை மீண்டும்  பயன்படுத்தக் கூடாது. அவை எல்லாமே ஒரே தொழிற்பாடுடையவை ஒரே தொழிற்பாடுடைய பூச்சி நாசினிகளை நாங்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தினால் அவற்றுக்கு   எதிர்ப்புள்ள குலவகை   உருவாகி அடுத்த போகத்தில்  நெற்பயிரில் பாரிய பீடை தாக்கத்தை எதிர் நோக்க வேண்டியதாக காணப்படும்.

இது தவிர இந்த இரசாயனங்களை நாங்கள் கலக்கின்ற போது   சொல்லப்பட்ட எண்ணிக்கையில் தாங்கிகளை விசிற  வேண்டும் உதாரணமாக ஒரு  கெக்டேயருக்கு 25 தாங்கிகளை விசிறவேண்டும்  

அன்பான விவசாயிகளே விவசாய இரசாயனங்களை பயன்படுத்தும் போது மிகக் கவனமாகவும் அவதானமாகவும் பயன்படுத்த வேண்டும்.  இந்த நேரங்களில் எலிக் காய்ச்சல் போன்ற நோய்களும் பரவிக் கொண்டுள்ளன. எனவே விவசாய நிலங்களுக்குள் செல்லுகின்ற போது காலில் ஏதாவது ஒரு பாதுகாப்பு உறையணிந்து விவசாய நிலங்களுக்குள் செல்ல வேண்டும். எனவும் தெரிவித்தார்.  
 

119 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.