(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்றைய தினம் (19.12.2023) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை மற்றும் இடைவிலகல், மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள், சுகாதாரம் மற்றும் உணவு, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், இளவயது திருமணம், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாககாவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி. குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.க. ஜெயபவானி, பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, சட்ட வைத்திய அதிகாரி, உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர்கள், உளநலவளத்துறை உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.