(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மக்கள் மழைவெள்ளத்தில் தவிக்க. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்ப்பையும் மீறி தனது பணிகளை முன்னெடுத்து இழப்பீட்டையும் மரண சான்றிதழையும் வழங்க துடிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் (ஓ எம் பி ) நேற்றைய தினம் (20.12.2023) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அழைத்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் (ஓ எம் பி ) அழைக்கப்பட்டு வருகைதந்த துணுக்காய், ஜயன்கன்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டியகுளம் பகுதி மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் சாட்சியம் அளித்து ஆவணங்களை வழங்கி இருந்தனர்.
இதிலே கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவுகள் தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையில்லை என்றும், தமக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க அவர்கள் எத்தனிப்பதாகவும் குற்றம் சுமத்திய அவர்கள், தமக்கு தமது உறவுகளை தருமாறே கூறியுள்ளோம் என தெரிவித்தனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்டோருக்கான அலுவலகர் தமக்கு இதுவரை 21,000 த்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகள் உடைய முறைப்பாடுகள் எனவும், அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிலும் 4786 முறைப்பாடுகளுக்கு விசாரணைகளை தாம் முடித்துள்ளதாகவும் அதிலும் 3400 விண்ணப்பங்களில் இடைக்கால நிவாரணத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிலும் 1300 விண்ணப்பங்களை இழப்பீட்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் காணாமல் செய்யப்பட்டதுக்கான சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் என்பவற்றை உரிய விசாரணைகள் செய்து அவர்களுக்கு வழங்குவதற்கு தமது அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.