(செல்வன்)
உலக உணவுத்திட்டத்தின் அனுசரணையுடன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சிறு வியாபாரிகளை வலுவூட்டும் செயற்திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு மூன்றாம் கட்ட உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வானது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன்குளம், பாலிநகர் மற்றும் செல்வபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு சிறு வியாபாரிகளுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர், சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர், சமுர்த்தி மாவட்ட அலுவலக முகாமையாளர்கள், உலக உணவுத்திட்டப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், மாந்தை கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.