(ஆதவன்)
அம்மனின் அதிசயம் பக்தர்கள் மெய்சிலிர்ப்பு
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதால், திருடும் முயற்சியைக் கைவிட்டுத்தப்பிச் சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அதிசயமிக்கது. அந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். திருடும் நோக்கத்துடன் மூன்று பேர் கதவை உடைத்துக் கொண்டு உட்செல்ல முயன்றுள்ளார்கள்.
கூரிய ஆயுதங்களுடன் ஆலயத்துக்குள் நுழைந்து, சி.சி.ரி.வி. இணைப்பை துண்டித்துவிட்டு அவர்கள் திருட முற்பட்டுள்ளார்கள். சி.சி.ரி.வி. இணைப்பைத் துண்டிப்பதற்காக அதன் இணைப்புப் பெட்டியினுள் கை வைத்தபோதே, அதற்குள்ளிருந்த பாம்பு திருடர்களில் ஒருவரைத் தீண்டியுள்ளது. இதனையடுத்து திருட வந்தவர்கள், பாம்பு தீண்டலுக்கு இலக்கானவரைத் தூக்கிக் கொண்டு, அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சி.சி.ரி.வி.யில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.