(மாதவன்)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நிதியத்திலிருந்து வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு (26 டிசம்பர்) காலை 9 மணியளவில் கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நிதியத்திலிருந்து இடர் கால பணிக்காக 10,000 டொலர் பெற்றுக்கொள்ளப்பட்டு, மாவட்ட லயன்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
3250 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் 1000 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களிற்கும், மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களிற்கும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வந்த பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.