(புதியவன்)
இலங்கையில் தமது சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க நோக்கி சென்ற வெளிநாட்டு தம்பதி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த (76-78) வயதுடைய தம்பதிகளும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான ஓட்டுநர் ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
கட்டுநாயக்க வானூர்தித்தளத்துக்கு இவர்களை ஏற்றிச் சென்ற மகிழுந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் (19) இன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க வானூர்தித்தளத்துக்கு செல்லும் வேளையே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.