(ஆதவன்)
அனலைதீவில் கடந்த திங்கட்கிழமை பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் வழித்தட அனுமதி, வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 780 இலக்க தனியார் பேருந்தில் பயணித்த பெண் இறங்குவதற்கு முன்னரே பேருந்து இயக்கப்பட்டதால் அவர் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முதல்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை, பேருந்தின் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளது.போட்டிக்கு பேருந்துக்களை ஓடுவது தொடர்பாகவோ இவ்வாறான விபத்துக்கள் தொடர்பாகவோ பொதுமக்கள் உடனடியாக வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபைக்கு தெரியப்படுத்த முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.(ஐ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.