(புதியவன்)
நானுஓயா காவல் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபெக் பகுதியில் பேருந்துதொன்று வீதியை விட்டு விலகி, மண்மேடுடன் மோதி விபத்துக்குள்ளானது இன்று (22) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து மாத்தலையிலிருந்து ஸ்ரீபாத சுற்றுலாவுக்கு வருகை தந்த பேருந்து ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளானது சம்பவத்தின் போது, பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் 8 பேர் நுவரெலியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏனையவர்கள் விபத்தின் பின்னர் பேருந்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய விசாரணைகளை நானு ஓயா காவல்துறை மேற்க்கொண்டுவருகின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.