(புதியவன்)
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அம்பாறை மாவட்டத்திற்கான இரண்டு நாள் பயணமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த பயணத்தின் போது தீகவாபி ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன நல்லிணக்கம் தொடர்பான (ONUR) வேலைத்திட்டத்தினை மீண்டும் மார்ச் மாதம் ஆரம்பிக்கவிருப்பதாக இவ் பயணத்தின் போது குறிப்பிட்டிருந்தார்.
இங்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜெயரத்னவும் கலந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்டசெயலர் ஜே.ஜெகதீசன், அட்டாளச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஷாபிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.