(புதியவன்)
மஹாபாகே பிரதேசத்தில் ஆணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மஹாபாகே, எலப்பிட்டிவல சந்தியில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்கு அருகில் வைத்து 42 வயதுடைய நபரை சுட்டுக் கொன்ற ஆயுததாரிகள் மற்றும் உதவியாளரை அடையாளம் காண விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கி ஏந்திய இருவர் கடைக்கு அருகில் வந்து புதன்கிழமை துப்பாக்கியை பயன்படுத்தி அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் விளக்கினர்.
ராகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தவர் குற்றவியல் குழுத் தலைவன் “வெல்லே சாரங்க”வின் மைத்துனரான “உக்குவா” என அழைக்கப்படும் ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த இவர், குறித்த இறைச்சிக் கடையின் உரிமையாளராவார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.