(புதியவன்)
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு சென்று நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பிரதேச மக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் 2 :40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையை சேர்ந்த 14 வயதுடைய என்.ஜீ டிலிப்ப கமகே என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலமானது உடல்கூற்று பரிசோதனைக்காக தற்போது லிந்துலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.