மாதவன்.
இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையுள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக் ஜலசந்தி கடலை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய இலங்கை இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று 31பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகுமூலம் புறப்பட்டு தலைமன்னாரைச் சென்றடைந்தனர்.
அங்கிருந்து இன்று காலை கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்த தொடங்கி சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ்(வயது-78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக்குழு நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவரின் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
குறித்த நபர் உயிரிழந்ததால் ஏனைய 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது .
மேலும், உயிரிழந்த நபர் தொடர்பில் ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.