(புதியவன்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதங்கள் பயனற்றவை என்றும் அதிகமான செலவுகளை ஏற்படுத்துவதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் "மௌபிம" என்ற சிங்கள நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த வருடங்களில் இத்தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விவாதங்களுக்கு 13 கோடியே 20 இலட்சம் ரூபா வரை செலவாகியுள்ளதாகவும் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் சில பகுதிகள் பின்வருமாறு ;
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 11 தடவைகள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவாதங்களை நடத்துவதற்காக 13 கோடியே 20 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாரியளவிலான நிதியை செலவு செய்து நாடாளுமன்றத்தில் வாத விவாதங்கள் நடாத்தப்படுவதால் இந்த பிரச்சினைக்கு கிடைத்த தீர்வு என்ன என்ற கேள்வி எழுகிறது.
குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுமானால் இத்தனை பிரயத்தனத்திற்கும் பலன் கிட்டியதாக நிம்மதியடைய முடியும்.
அவ்வாறு அன்றி விவாதங்களால் தொடர்ந்தும் என்ன நடக்கப்போகின்றது? பிரச்சினைகள் தொடர்பான வாத-விவாதங்களினால் மாத்திரம் நாட்டை ஒருபோதும் ஒரு நிலைக்கு கொண்டுவர முடியாது.
சுதந்திரத்திற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாத-விவாதங்கள் தொடர்பான ஹன்சாட் அறிக்கைகளை பிரட்டிப் பார்த்தால் இந்த விடயத்தை உனர்ந்துகொள்ள முடியும்.
ஆகவே, எந்தவொரு விடயம் தொடர்பிலும் வாத-விவாதங்கள் நடத்தப்படுவது தவறான விடயம் அல்ல, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்கின்ற போதிலும் அது எந்தளவு ஆக்கபூர்வமானதாக அமைகின்றது என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அந்த அசிரியர் தலையங்கத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.