கனடாவில் சீக்கியரும், அவரது 11 வயது மகனும் பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்டனர். ஹர்ப்ரீத் சிங் உப்பால்(41) கனடாவில் உள்ள எட்மன்டன் நகரில் வசித்து வந்தவர். ஹர்பிரீத் சிங் மற்றும் அவரது 11 வயது மகன் காஸ் நிலையத்துக்கு வெளியே காரில் இருக்கும் போது அவரது காரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் காரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் ஹர்பிரீத் சிங், அவரது 11 வயது மகன் கொல்லப்பட்டனர். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஹர்பிரீத்சிங் மகனின் நண்பன் காயம் எதுவுமின்றி தப்பினான். ரவுடி கும்பல்களுக்கு இடையயோன மோதலின் விளைவாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.