(புதியவன்)
தேசிய மக்கள் சக்தியின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்தியா பயணம், இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் தலைவர்களை அழைப்பதில் இந்தியாவின் நோக்கங்கள் பற்றிய ஊகங்களை எழுப்பியது.
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி ஒரு வலுவான மூன்றாம் தரப்பாக தோற்றம் பெற்றுள்ளமை, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிர் சமநிலையாக இருக்கக்கூடிய வகையில் அவர்களுடன் உறவுகளை வளர்க்க இந்தியாவை தூண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி போன்ற ஒரு சோசலிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவை அமைப்பதில் இந்தியாவின் ஆர்வம், இந்தியப் பெருங்கடலில் அதன் மூலோபாய இலக்குகள் மற்றும் பொருளாதார நலன்களுடன் ஒத்துப்போகிறது.
தமிழ் சமூகத்தைப் பாதிக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இந்தியா வரலாற்று ரீதியாக கவலை தெரிவித்தாலும், இந்திய உள்நாட்டு அரசியலில் சமீபத்திய மாற்றங்கள், குறிப்பாக பிஜேபியின் ஆதிக்கம், எதிர்கால இருதரப்பு உறவுகளை பாதிக்கலாம்.
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வரலாற்று ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ்நாட்டு காரணி, இந்தியாவில் தற்போதுள்ள ஒரு கட்சி மேலாதிக்கத்தின் கீழ் குறையக்கூடும், இது இலங்கை-இந்திய உறவின் இயக்கவியலை மாற்றியமைக்கக்கூடும். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இருதரப்பு உறவின் பலன்களை அதிகப் படுத்தும் வகையில் இலங்கை தனது அணுகுமுறையை மாற்றியமைக்க விழிப்புடன் இருக்க வேண்டும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.