71 ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டி கடந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் டில்லியில் ஆரம்பமானது. இதன் இறுதிப் போட்டி நேற்று மும்பையில் நடந்தது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை இந்தி திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் பங்குபற்றினர். இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உட்பட 14 பேர் தகுதி பெற்றனர்.
இந்தியா, மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, செக் குடியரசு, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்த்துக்கல், லெபனான், போட்ஸ்வானா, கவுதமாலா நாடுகளைச் சேர்ந்த அழகிகளும் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான 71 ஆவது உலக அழகிப் பட்டத்தை வென்றார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2022 ஆம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தைச் சூட்டினார்.இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டியால் போட்டியின் முதல் 4 இடங்களுக்குள் வர முடியவில்லை.
சினி ஷெட்டி 2022 ஆம் ஆண்டு இந்திய அழகிப் பட்டத்தை வென்றவர். உலக அழகிப் பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்றுள்ளது. உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டினா பிஸ்கோவா சட்டத்துறை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.(க)
39kopp
3ro7pn
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.