அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என கூறுவதுண்டு ஆனால் பருக்கள் முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றன. பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, அவை மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்த முறைகளைப் பின்பற்றினால் முகப்பருக்கள் நீங்கிப் பொலிவுடன் வலம் வரலாம்.
மஞ்சளை கடுகு எண்ணெயுடன் குழைத்து முகட்தில் பருக்கள் இருக்கும் இடங்களில் மட்டும் தடவி காய விட வேண்டும். மஞ்சள் இறுக்கி பருக்களை பிடிக்கும் அளவு காய்ந்ததும் முகத்தை பன்னீர் கொண்டு கழுவ வேண்டும்.
எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும்.
சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும்.
சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.
ரோஜா மொட்டுக்களை சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைத்து அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.
பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.
புதினா இலைகளை நீர்விடாமல் பால் தெளித்து அரைத்து தேவையான அளவு தேன் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர முகப் பருக்கள் நீங்கும்.
கற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசிய பின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவரபருக்கள் நீங்கும்.
அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவ, இது பருவைக் குணமாக்கும்.
பட்டையை நைஸாக பொடித்து தேவையான அளவு பொடி எடுத்து தேன் கலந்து குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி எங்கெல்லாம் பருக்கள் இருக்கிறதோ அங்கு மட்டும் அதை பற்று போல் போட்டு15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் காட்டனை நனைத்து பரு வந்த இடத்தில் துடைத்து பிறகு ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுத்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும்.
வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.
ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி, பருத்தொல்லை அகலும்.
2 ஸ்பூன் வினிகரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து, அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் நன்கு உலர விட்டு பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்தால் போதும். உங்கள் முகத்தில் இருந்த பருக்கள் காணாமல் போய்விடும்.
நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும்.
50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைத்து 20 நாட்கள் கழித்து இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும்.
குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.
திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவி வர, பருக்கள் நீங்கும்.
பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.
கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.
அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் பருக்கள் மறையும்.
o8k6k1
xh87iz
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.