வரலாற்றில் இன்று – 26.03.2024
வரலாற்றில் இன்று – 26.03.2024

(புதியவன்)

மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டின் 85 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 86 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 280 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார்.
1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார்.
1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார்.
1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.
1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.[1]
1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
1913 – முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.
1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்றம் சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.
1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.
1971 – கிழக்கு பாகிஸ்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991 – அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.
1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.
2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
2005 – சீனாவின் பிரிவினைக்கு எதிரான சட்டத்திற்கெதிராக 200,000 முதல் 300,000 வரையான தாய்வான் மக்கள் தாய்பெய் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2010 – தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.
2015 – சவூதி அரேபியா யெமன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.


பிறப்புகள்


1874 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
1907 – மகாதேவி வர்மா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1987)
1910 – கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2002)
1913 – பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (இ. 1996)
1926 – தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1992)
1933 – டின்டோ பிராஸ், இத்தாலிய இயக்குநர்
1940 – நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி
1941 – விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி, உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர்
1941 – ரிச்சர்ட் டாக்கின்சு, கென்ய-ஆங்கிலேய உயிரியலாளர்
1953 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (இ. 2011)
1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்
1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்
1979 – ஜெய் சான், ஆங்கிலேயப் பாடகர், தயாரிப்பாளர்
1985 – கீரா நைட்லி, ஆங்கிலேய நடிகை


இறப்புகள்


1326 – அலெசாந்திரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307)
1797 – ஜேம்ஸ் கூட்டன், இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726)
1827 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1770)
1892 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1819)
1902 – செசில் ரோட்சு, ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமர் (பி. 1853)
1923 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)
1960 – எமில் குருப்பே, அமெரிக்கக் கதிர் மருத்துவர் (பி. 1875)
1977 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1910)
2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)
2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)
2015 – தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (பி. 1931)
2020 – நீர்வை பொன்னையன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1930)
2020 – வி. சேதுராமன், தமிழகத் திரைப்பட நடிகர், மருத்துவர் (பி. 1982)


சிறப்பு நாள்


விடுதலை நாள் (பாக்கித்தானிடமிருந்து 1971)
மாவீரர் நாள் (மாலி)(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

263 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.