யோகி.
முல்லைத்தீவு- முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தியும் திருமுருகண்டியிலுள்ள இராணுவ முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதில் காப்ரக வாகனத்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.