புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
செல்வன்.
புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் அருட்பணி அ.றொபின்சன் ஜோசப் தலைமையில் புலைமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று (02) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புலைமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்களையும் விருந்தினர்களையும் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கள சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளர் சிங்கராசா அருள்நேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லை மறைக்கோட்ட குரு முதல்வர், புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை A.Pஅன்ரனிப்பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க/பொ/த சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள், புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள், கணித பாடத்தில் ஒலிம்பியாட் போட்டியிலும் விளையாட்டுகளில் திறமை பெற்றவர்கள் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.