வரலாற்றில் இன்று – 07.05.2024
வரலாற்றில் இன்று – 07.05.2024

(புதியவன்)

மே 7 கிரிகோரியன் ஆண்டின் 127 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 128 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது.
1664 – பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார்.
1697 – சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது.
1832 – கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
1840 – ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர்.
1895 – உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் உருசியாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915 – முதலாம் உலகப் போர்: செருமனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.
1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
1920 – சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1930 – 7.1 அளவு நிலநடுக்கம் வடமேற்கு ஈரானையும், தென்கிழக்கு துருக்கியையும் தாக்கியதில் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: செருமனியின் கொண்டோர் லீஜியன் படைப்பிரிவு பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு உதவியாக எசுப்பானியா வந்து சேர்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று சோகோகோ என்ற சப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில் செருமனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.
1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.
1952 – நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 – வியட்நாமில் "தியன் பியன் பு" சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1960 – பனிப்போர்: அமெரிக்காவின் யூ-2 போர் வானூர்தியின் விமானி காரி பவர்சு என்பவரைத் தாம் பிடித்து வைத்திருப்பதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் அறிவித்தார்.
1986 – ஏழு கொடுமுடிகளிலும் ஏறிய முதலாவது மனிதர் என்ற சாதனையை பாட்ரிக் மரோ என்ற கனடியர் ஏற்படுத்தினார்.
1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து பெப்ரவரியில் திருடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) மீளக் கைப்பற்றப்பட்டது.
1999 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உருமேனியா சென்றார். 1054 இல் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் கிழக்கு மரபுவழி திருச்சபை நாடொன்றுக்கு திருத்தந்தை சென்றது இதுவே முதல் தடவையாகும்.
1999 – கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
1999 – கினி-பிசாவு நாட்டின் அரசுத்தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000 – விளாதிமிர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் உயிரிழந்தனர்.
2004 – அமெரிக்கத் தொழிலதிபர் நிக் பெர்க் இசுலாமியத் தீவிரவாதிகளால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படும் காட்சி காணொளியாக இணையத்தில் வெளியிடப்பட்டது.
2007 – உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை எருசலேம் நகருக்கருகில் இசுரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.


பிறப்புகள்


1711 – டேவிடு யூம், இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776)
1814 – ராபர்ட் கால்டுவெல், அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891)
1819 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1905)
1833 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1897)
1840 – பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசைமைப்பாளர் (இ. 1893)
1861 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)
1880 – பாண்டுரங்க வாமன் காணே, இந்திய இந்தியவியலாளர், சமக்கிருந்த அறிஞர் (இ. 1972)
1883 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941)
1892 – சோசப்பு பிரோசு டிட்டோ, யூகொசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (இ. 1980)
1901 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (இ. 1961)
1919 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை (இ. 1952)
1927 – ரூத் பிராவர் ஜாப்வாலா, செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2013)
1935 – அ. மா. சாமி, தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் (இ. 2020)
1949 – சு. திருநாவுக்கரசர், தமிழக அரசியல்வாதி
1968 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
1971 – தாமசு பிக்கெட்டி, பிரான்சிய பொருளியலாளர்
1984 – கெவின் ஓவன்சு, கனடிய மற்போர் வீரர்
1987 – சந்தீப் கிசன், தெலுங்குத் திரைப்பட நடிகர்
1989 – அதர்வா, தமிழகத் திரைப்பட நடிகர்


இறப்புகள்


1617 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564)
1825 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1750)
1964 – பி. கண்ணாம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1910)
1990 – சாம் தம்பிமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1932)
2011 – வில்லார்டு பாயில், நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (பி. 1924)
2015 – அமலெந்து குகா, இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் (பி. 1924)


சிறப்பு நாள்


வானொலி நாள் (உருசியா, பல்காரியா)(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

203 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.