ஆளுநர் செயலகத்துக்கு முன் மக்கள் போராட்டம்!
மாதவன்.
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்கு தொடுவாய், கொக்கு குழாய் மற்றும் கருணாகேணி பிரதேச மக்களினால் இன்று காலை வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்களுக்கா, எமக்கு நீதி வேண்டும் மற்றும் மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.