(புதியவன்)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, உயர்தரப் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தரக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.