நேற்று 19 அடி உயர அம்பேத்கர் சிலையின் திறப்பு விழா நடந்தது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அக்கோகீக் என்ற இடத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சென்றவர்களும், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களுமாக சுமார் 500 பேர் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
மழை பெய்து கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல் ஜெய் பீம் கோஷம் முழங்க அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சிலை திறப்பு விழாவையொட்டி வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான அம்பேத்கர் சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.