சிந்திப்போமா
சிந்திப்போமா

 

“வெள்ள்த்தணையது மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்தணையது உயர்வு”

 வாழ்க்கை நாம் நினைத்த பாதையில் பயணித்து விடுவதில்லை. அது பலவிதங்களில் மாறுபடக்கூடியது. வாழ்க்கைப்பாதை எப்படி மாறினாலும் அதற்கேற்ற மனிதர்களாக நாமும் அதன் பின்னால் ஓட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களிடம் இருக்கின்ற வேண்டாத குணங்களை போக்குவதற்கு சிந்திப்பதைக் காட்டிலும் அடுத்தவர்கள் மீதே அதிகம் குற்றம் சுமத்தி வருகின்றோம். எங்களுக்கான இலட்சியத்தை அடைவதற்கு கடுமையாக உழைக்காமல் அவர்களால்தான் என்னுடைய வாழ்க்கை இப்பிடியானது என அடுத்தவர்கள் மேல் வன்மத்தை கொட்டி வருகின்ற ஒரு நிலைப்பாட்டிலே நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுடைய இயலாமைகளுக்கும், பலவீனங்களுக்கும் , தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும் என்ன காரணம் என்பதை கண்டறியாமல் நாம் பழிசுமத்தும் பண்புடனும் பழி வாங்கும் உணர்வுடனும் இழிவான மனநிலையோடு செயற்படுகின்றோம்.
இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கஸ்ரம் தெரியாமல்; வளர்க்கிறார்கள். அதனாலேயே எங்களது இளம் சமுதாயம் பல சீரழிவுகளை சந்திக்க நேரிடுகின்றது. நான் பட்ட கஸ்ரம் என் பிள்ளை படக்கூடாது, எனக்கு கிடைக்காததெல்லாம் என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என பெற்றோர்கள் பிரார்த்திக்கின்றார்கள். அது தவறில்லை ஆனால் எந்தவொரு கஸ்ரமுமே என் பிள்ளைக்கு வந்திடக்கூடாது என பார்த்து பார்த்து வளர்ப்பதானாலேயே பெற்றோர்களின் அருமையும் அவர்களது கஸ்ரங்களும் இன்றையகால பிள்ளைகளுக்கு தெரியாமல் போய் விடுகின்றது. ஓவ்வொரு பெற்றோர்களும் தமது வாழ்க்கையை தியாகம் செய்து தங்களது தன்மானத்தை அடகு வைத்து தமது பிள்ளைகயை வளர்க்கிறார்கள் என்பதை பிள்ளைகள் உணர்வதில்லை. ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் கௌரவமாக இது எனது அம்மா, அப்பா என பெருமையாக அறிமுகப்படுத்தும் பக்குவம் இன்று அழிந்து கொண்டு செல்கின்றது. பிள்ளைகள் பெற்றோரை உணரும் போது பெற்றோர்கள் உயிருடன் இருப்பதில்லை. கண்ணீர் வாழ்வாகின்றது. ஆதலால் ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைக்கு இயற்கை கொடுக்க வேண்டிய கஸ்ரத்தை, கொடுக்க வேண்டிய துன்பத்தை, கொடுக்க வேண்டிய தோல்வியை கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை கொடுக்கட்டும். ஆனால் அத்தனையையும் தாண்டி என் பிள்ளை அதற்கு சவாலாக எழுந்;து வருமளவிற்கு “தன்னம்பிக்கையையும் தளர்வடையா மனத்தையும் கொடு இறiவா” என பிரார்தியுங்கள். 
போகின்ற வேகத்தில் விதைகளை தூவிவிட்டு போகின்ற உழவன் அல்ல நாம். நின்று ஊன்றிவிட்டுப் போர உழவன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். விதைகளை தூவி விட்டு போகின்ற போது அது தரையிலோ அல்லது வீதிNயிலோ அல்லது பாறையிலோ விழலாம். ஆனால் ஊன்றிவிட்டு போகின்ற போது கண்டிப்பாக பக்கத்தில நின்று பாரத்து பக்குவமாக ஊன்றுவோம். அதே போல எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சனையிலும் எனக்கு தோல் கொடுக்க என் பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையை நாம் நம் பிள்ளைகளின் மனத்தில் விதைக்க வேண்டும். பக்கத்தில் கூட இருந்து நம்பிக்கை கொடுக்க வேண்டும். 
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்தியாலமும்  ஒவ்வொரு நிமிடமும் எமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஓவ்வொரு தனிநபரும் மாறும் போது வன்முறைகளற்ற பேதங்களற்ற முரண்பாடுகளற்ற சிறந்தொரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.  ஓவ்வொரு தனிமனிதனுடைய சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ற வித்திலே அவன் உயர்வாக போற்றப்படுகின்றான். அந்தவகையில் ஒவ்வொருத்தரும் நம்மை யார் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட மாற்றத்தை நமக்கான வாய்ப்பாக உருவாக்கி மனம் தெளிவானால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்பதற்கிணங்க நல்ல சிந்தனையோடும் தெளிவோடும் நல்ல மனிதர்களாக வாழ்வோமாக………………

தனிஸ்ரா பாலகிருஷ்ணன்  

சிந்திக்க வேண்டியது! பெற்றோரா? பிள்ளைகளா? | UTHAYAN TV | #TamilMotivationalSpeech

 

378 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.