(புதியவன்)
தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அமெரிக்க முன்னாள் அரச தலைவர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் காரணமாக டிரம்ப் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.
டிரம்புக்கு 35.5 கோடி டொலர் அபராதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால் அவர் மேலும் அதிகமான பணத்தை செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப் மற்றும் அவரது பிள்ளைகள் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடையையும் நீதிபதி பிறப்பித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.