தண்டனையள் இறுக்கமாயிருந்தால் குற்றங்கள் குறையுமெண்டது உண்மைதான். ஆனால் செய்த குற்றத்தைவிடவும் தண்டனையின்ர தன்மை கூடினால் அது வேறமாதிரி வந்திடும். பிக்மட்சுகளில பள்ளிக்கூடப் பெடியள், ட்ரம்ஸ் அடிச்சு, கொடியளோட ஆடிப்பாடுறதைப் பற்றி பட்சி அண்டைக்குச் சொல்லியிருந்த தெல்லோ. அப்பிடி ஆடிப்பாடுற பெடியள் கொஞ்சம் எல்லைமீறினதையும், அதால சனத்துக்கும், பள்ளிக் கூடங்களுக்கும் இடைஞ்சல் வந்ததெண்டும் பட்சி சொன்னது.
அப்பிடி ஆடிப்பாடின பள்ளிக்கூடப் பெடியளுக்கு எதிரா ஒரு 'பெரிய பள்ளிக்கூடம்' கடும் நடவடிக்கை எடுத்திருக்குது. ஆரெல்லாம் றோட்டு வழியளில போய் பள்ளிக்கூடக் கொடியளோட ஆடிச்சினமோ, அவையும், அவையின்ர பெற்றோரும், பக்கத்தில உள்ள பள்ளிக்கூடங்களை போய் சுத்தப்படுத்தோணும் எண்டதுதான் அந்தத் தண்டனை. தங்கட பள்ளிக்கூடத்தில இனிமேல் இப்பிடியான வேலையளில பெடியள் இறங்கக்கூடாது எண்டதுக்காக உடனடியா அந்தப் பள்ளிக்கூடம் நடவடிக்கை எடுத்ததைப் பாராட் டத்தான் வேணும். அதில சந்தேகமில்லை. ஆனால் அதுக்கு குடுக்கப்பட்ட தண்டனை சரியோ எண்டதுதான் இப்ப கேள்வி.
அந்தப் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில கனக்க மகளிர் கல்லூரியள் தான் இருக்கு. அங்கதான் போய் இந்தப் பெடியள் சுத்தப்படுத்துற வேலை செய் யோணும். தங்கட வகுப்பு பொம்பிளைப்பிள்ளையளுக்கு முன்னால், அதுவும் தங்கட தாய், தகப்பனோட போய், கூட்டி, குப்பை அள்ளுற வேலையைச் செய்யேக்க பள்ளிக்கூடப் பெடியளுக்கு கடும் அவமானமா இருக்கும். அப்பிடி அவமானப்படுத்துறது. அந்தப் பெடியளிட்ட மாற்றத்தைக் கொண்டுவாறதைவிடவும், வன் மத்தைத்தான் கூட்டும். சிலவேளைகளில் பிள்ளையள் இந்த அவமானத்தால பிழையான வழியளில் போகவும் கூடும். தண்டனை குடுக்கத்தான் வேணும். அதில மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இப்பிடிச் சுத்தப்படுத்துற தண்டனைதான் குடுக்கவேணும் எண்டால் தங்கட சொந்தப் பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யிற வேலையைக் குடுத்திருக்கலாம். ஆனால் இப்பிடி பிறத்திப் பள்ளிக்கூடங்களில அதுவும் பொம்பிளைப் பிள்ளையள் மட்டும் படிக்கிற பள்ளிக்கூடங்களில் தங்கட பெற்றோரோடபோய் வேலை செய்யிறதெண்டது கடும் மன உளைச்சலைக் குடுக்கிற தண்டனை.
அதைவிட சில கேள்வியளும் இருக்கு. தனிய பொம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடங்களில் இன்னொரு பள்ளிக்கூடத்துப் பெடியளை வேலை செய்ய விடுறதுபற்றி, தங்கடபாட்டில ஒரு பள்ளிக்கூடம் முடிவெடுக்க ஏலுமோ? அதுக்கு டிப்பார்ட்மெண்டில அனுமதி எடுக்கத் தேவையில்லையோ? இல்லாட்டி பெரிய பள்ளிக்கூடக் குரு செய்தால் குற்றமில்லை எண்டு சட்டமேதும் இருக்கோ? டிப்பார்ட்மெண்டுக்கு இப்பிடி பெடியளை வேலைக்கு அனுப்பினது தெரியாதா? தெரிஞ்சும் தெரியாதமாதிரி இருக்சினமோ? ஒரு குற்றத்தைச் சரிசெய்யவெண்டு வெளிக்கிட்டு, இப்ப பெடியளின்ர மனவுளைச்சலையும் கூட்டி, நடைமுறைக்கு பொருந்தாத காரியங்களையும் செய்திருக்கினம்.
குற்றங்களை உணரவைச்சு திருந்திருமாதிரித் தண்டனை குடுத்தாத்தான் அதில பிரியோசனம். அதைவிட்டிட்டு இன்னும் குற்றம் செய்யத்தூண்டுற மாதிரி தண்டனை குடுத்தால் அந்தத் தண்டனையே குற்றமாகிடும்.
(20.03.2024- உதயன் பத்திரிகை)
8awqwd
2u52ab
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.