ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி எண்டகணக்கில. மற்றவையின்ர வேலையில நொட்டையள் பிடிக்கத் தெரிஞ்ச எங்கட அரசியல்வாதியள், அதே வேலையைத் தாங்கள் செய்யேக்க, உலகத்திலயே இல்லாத புதுவிளக்கம் ஒண்டைச் சொல்லி உருட்டு வினம். அதிலையும் வீட்டுக்கட்சிக்காரர் இதில விண்ணர், அவையின்ர கட்சி மூச்சுக்கு முந்நூறுதரம் 'தமிழ்த் தேசியம்' எண்டு உச்சரிக்குது. ஆனால் அவையின்ர செயற்பாடுகள் கனக்க தமிழ்த் தேசியத்துக்கு எதிராத்தான் இப்ப நடக்குதெண்டு சனம் கதைக்குது. அதை உறுதி செய்யிற மாதிரியான ஒரு சம்பவம் நடக்கப் போகுது. நடந்த பிறகு சொல்லிறதை விடவும். நடக்க முதலே சொன்னாலாவது அதைத் திருத்தக்கூடும் எண்ட நப்பாசை பட்சிக்கு.
கிளிநொச்சிக் கச்சேரிக்கு முந்தி பொறுப்பா இருந்த அம்மணிக்கு முழுநேர வேலையே, வீணைக்காரருக்கு தாளம் போடுறதுதான். வீணைக்காரரின்ர கொள்கை என்னவெண்டு உங்கள் எல்லாருக்குமே நல்லாத் தெரியும் 'மத்தியில தேங்காய் மாநிலத்தில மாங்காய்' எண்டு சொல்லிக்கொண்டு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வேலையளைச் செய்யிறதுக்குத்தான் ஒவ்வொரு அரசாங்கமும் அந்தக் கட்சிக்கு அமைச்சர் பகுவியைத் தூக்கி எறியிறது. வாங்கின பதவிக்கு விணைக்காரரும் வஞ்சகம் செய்யிறேலை. அவையின்ர தமிழ்த்தேசிய ஒழிப்பில ஒரு திட்டம், நினைவேந்தல்களைக் குழப்பிறது. அதை நேரடியாக் குழப்பினால் சனம் தங்களோட குழம்பும் எண்டதால, பின்பக்கமா சில அலுவல்கள் பாப்பினம். அதில ஒண்டுதான். முக்கியமான நினைவேந்தல்கள். போராட்டங்கள். ஹர்த்தால்கள் நடக்கப்போறதா அறிவிச்ச திகதியளில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை வைப்பினம். அந்தக் கூட்டத்துக்கு தமிழ்த்தேசியம் கதைக்கிற எம்.பி.மார் போனால், அவை நினைவேந்தலிலையோ போராட்டத்திலையோ கலந்துகொள்ள ஏலாமல் போடும். அப்பிடியில்லாமல் போராட்டத்துக்கோ, நினைவேந்தலுக்கோ தமிழ்த்தேசிய எம்.பி. மார் போனால், அவையில்லாத நேரத்தில தங்களுக்கு ஏத்தமாதிரி தீர்மானங்களை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில வீணைக்காரரும். அந்த முன்னாள் கச்சேரி அம்மணியும் எடுக்கலாம். இதுதான் அவையின்ர திட்டம், திலீபன்ர நினைவேந்தல், கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதிகோரி நடத்தின ஹர்த்தால் நாளுகளில் இப்பிடியெல்லாம் கூட்டம் போட்டவை.
அப்பிடி அந்த அம்மணியும், அமைச்சரும் கூட்டம் போட்டதுக்கு தமிழரசுக்கட்சி கடுமையாக் கொதிச்சது. வேற நாளில கூட்டத்தை வைக்கச் சொல்லி தமிழரசுக் கட்சி எம்.பி.மார் கடிதங்களும் எழுதினவை. இப்ப என் னெண்டால், அதே தமிழரசுக் கட்சிக்காரர் அன்னை பூபதியின்ர நினைவேந்தல் நாளில (இந்த மாதம் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை) தங்கட மத்திய குழுக்கூட்ட மொண்டை வவுனியாவில வைக்கப்போறதா அறிவிச்சிருக்கினம். சத்தியமே இல்லாத லிங்கத்தாருக்குத்தான் தமிழ்த் தேசியச்சுரணை இல்லையெண்டு விட்டாலும், மாவையருக்கு அன்னைபூபதியின்ர நினைவுநாளில கூட்டம் வைக்கிறது சரியில்லை எண்டு தெரியாதோ. கட்சியே கவிண்டு கொட்டுண்டு கிடக்கேக்க, உந்த உப்புச்சப்பில்லாத மத்திய குழுக் கூட்டத்தை ஒருநாள் பிந்தியோ முந்தியோ வைச்சால் என்ன குடியோ முழுகிப்போடும்? இப்ப அன்னைபூபதியையே மறந்து கூட்டத்தை வைக்கிறவை, கொஞ்ச நாளில எலக்சன் எண்டவுடன தமிழ்த்தேசியம் தங்கட உயிர் எண்டு வாக்குக்கேக்க வரேக்க, சனத்திட்ட வாங்கிக்கட்டவும் ரெடியா இருக்கோணும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.