எப்ப ஆர் சாவினம் எண்டு பார்த்துக் கொண்டிருக்கிற சில கடைக்காரரைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். சவப்பெட்டி விக்கிறவையைத்தான் அப்பிடிச் சொல்லுறது. முந்தியெல்லாம் எங்களிட்ட உந்தச் சவப்பெட்டிச் சம்பிரதாயம் இருக்கேலை. தென்னோலையில செய்த பன்னாங்குப் பாடையில தான் செத்தவையைச் சுடலைக்கு கொண்டு போறது வழக்கம். பிறகு உந்த வெள்ளைக்காரன் வந்த பிறகு மெல்ல மெல்ல சவப்பெட்டிச் சம்பிரதாயம் எங்களிட்டையும் வந்து, அப்பிடியே வெளிநாட்டுக் காசுகள் வரவர கட்டாயம் சவப்பெட்டியிலதான் செத்தவையை சுடலைக்கு கொண்டு போகோணும் எண்டளவுக்கு நிலைமை மாறிட்டது. அதால ஆரும் செத்த உடன முதல் செய்யிற வேலை, சவப்பெட்டி வாங்கப் போறது தான்.
சவப்பெட்டிக்காரரும் இப்ப நல்ல பிஸ்னஸ் தெரிஞ்ச ஆக்கள், வீட்டில செத்தவைக்கு ஒரு ரேட்டும், ஆஸ்பத்திரியில செத்தவைக்கு இன்னொரு ரேட்டும் வைப்பினம். வீட்டில செத்தவையின்ர சொந்தக்காரர் போனால், ஆற அமர நாலைஞ்சு கடை ஏறி இறங்கித்தான் சவப்பெட்டி வாங்குவினம். ஆனால் ஆஸ்பத்திரியில செத்தவையின்ர சொந்தக் காரர் அப்பிடியில்லை. நெருங்கின ஆக்கள்தான் ஆஸ்பத்திரியில நிப்பினம். அவைக்கு தங்கட சொந்தக்காரர் செத்ததே பெரிய இடியா இருக்கும். அந்த நேரத்தில கடைக்காரர் காட்போர்ட் மட்டையில செய்த பெட்டியை காட்டி, 'நாப்பதாயிரம் ரூபா எண்டு சொன்னாலும் கேட்டுக் கேள்வியில்லாமல் வாங்கிக் கொண்டு வந்திடுவினம். அப்பிடி ஆஸ்பத்திரியில சாகிறவையின்ர குடும்பத்தை அமத்திக் குத்தி, அறாவிலைக்கு பெட்டியை விக்கிறதுக்கெண்டே ஆஸ்பத்திரி வாசலில தங்கட ஆக்களை சம்பளம் குடுத்து உந்தக் கடைக்காரர் வைச்சிருக்கினம்.
அதைவிட ஆஸ்பத்திரியில வேலை செய்யிற சிலரும் 'இன்னார் முடியப் போகுது', 'இப்ப ஒராள் செத்திட்டுது' எண்டு போனில் தகவல் குடுப்பினம். அவ்வளவுதான். வீட்டுக்காரருக்கே தங்கட சொந்தக்காரர் செத்த தகவல் தெரியமுதல் 'நான் முந்தி, நீ முந்தி எண்டு சவப்பெட்டிக்கார ஆக்கள் மொய்ச்சுப் போடுவினம். ஒருமாதிரி செத்தவீட்டுக் காரரின்ர மண்டையைக் கழுவி, பெட்டியோட 'என்போம்' பண்ணுறதுக்கும், அப்பிடியே பிணத்தை வீட்டை கொண்டு போய்க் குருக்கவும், செத்தவீட்டுக்கு தங்கட பாண்ட் கோஷ்டியோட பிணத்தை சுடலைக்கு கொண்டு போகவும் ஒரு 'பக்கேஜை' சொல்லி சம்மதிக்க வைச்சுப் போடுவினமாம். செத்தவீட்டுக்காரர் இல்லை வேண்டாம். நாங்கள் வேற கடையில பாக்கிறம்' எண்டால் வெருட்டுற மாதிரி கதைமாறுமாம். 'சரி அங்கால எடுக்கிறதைப் பாப்பம்' எண்டு சண்டித்தனம் காட்டுறதால பயத்திலையும் ஓமெண்ட வேண்டி இருக்கெண்டு சனம் புலம்பது. அதைவிட தாங்கள் பிணத்தை 'என்போம்' பண்ணேக்க வெட்டிக் கொத்துறதையும் வீடியோ, போட்டோ எடுத்து ரிக்ரொக்கில போடுற வேலையளும் நடக்கு தாம். ஒருக்கா உரியவை உந்தக் கடைக்காரை கொஞ்சம் அமத்தி வைக்க மாட்டினமோ?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.