(ஆதவன்)
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில், அக்காவின் கணவரால் துர்நடத்தைக்குள்ளான 15 வயதுச் சிறுமி வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தந்தையின் பராமரிப்பில் சிறுமி வளர்ந்துள்ளார். சிறுமியின் அக்காவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளார் அக்காவின் கணவர். சிறுமியை வேறு இடத்துக்கு அழைத்துச்சென்று குடும்பமாக இருவரும் வாழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அவர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியுடன் உறவில் ஈடுபட்ட அக்காவின் கணவரை கைது செய்வதற்கு புதுக்குடியிருப்புப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(ஏ)
0jm8v4
xol2cs
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.