(ஆதவன்)
மக்களவைத் தேர்தலில் நாடுமுழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றிபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே,400 தொகுதிகள் என்ற இமாலய இலக்கே பா.ஜ.க. வின் திட்டம் என்று அமித் ஷா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தேர்தலுக்காக 'இண்டியா' கூட்டணியினர் நாடுமுழுவதும் தலைமை அமைச்சர் மோடியை பலவித மாக விமர்சனம் செய்து வருகின்றனர். மோடியை விமர்சனம் செய்வதன் மூலம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத்தான் அவர்கள் செயற்படுகின்றனர்.
சனாதன தர்மத்தையும், அயோத்தியில் இராமர் கோயில் கட்டியதையும் தி.மு.க.வி னர் கேவலமாகவும், அலட்சியமாகவும் பேசி, கோடிக்கணக்கான மக்களை காயப்படுத்தினார்கள். அப்படியிருந்தும் நாம் அனைவரையும் நம்மோடு இணைத்துக் கொண்டு, வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்- என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.